Archives: ஜனவரி 2018

அது அணுகுமுறையில் உள்ளது

ரெஜினா தன் வேலையிலிருந்து வீட்டிற்கு ஊக்கமும், ஆற்றலும் இழந்து சோர்வுடன் திரும்பிக் கொண்டிருந்தாள். அந்த நாள் அவருடைய நண்பரொருவரிடமிருந்து வந்த ஒரு துயரச் செய்தியோடு ஆரம்பமானது. அவள் தன் சக பணியாளர்களோடு பங்கு பெற்ற கூட்டத்திலும் அச்செய்தி அவளை வட்டமிட்டுக் கொண்டேயிருக்க, அவளுடன் பணி புரிபவர்கள் அவளுடைய கருத்துக்களோடு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். ரெஜினா தேவனோடு பேச ஆரம்பித்தபோது, அவள் அந்நாளின் மன அழுத்தத்தையெல்லாம் தள்ளிவிட்டு சில மலர்களோடு, காப்பகத்தில் இருக்கும் தன் நண்பர் ஒருவரை எதிர்பாராத விதமாக பார்க்கச் சென்றாள். தேவன் எவ்வளவு நல்லவராக இருக்கிறார் என்று மரியா அவளோடு பகிர்ந்து கொண்டபோது ரெஜினாவின் ஆவியும் உற்சாகமடைந்தது மரியா “எனக்கு என்னுடைய சொந்த படுக்கை, நாற்காலி, ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு, செவிலியரின் உதவி எல்லாம் இருக்கிறது. தேவன் அவ்வப்போது என் அறைக்கு சில முக்கியஸ்தர்களைக் கொண்டு வருகிறார், ஏனெனில் நான் அவர்களை நேசிக்கிறேன், அவர் என்னை நேசிக்கிறார்.” என்று கூறினார்.

அணுகுமுறை, கண்ணோட்டம் என்று சொல்லும் போது, வாழ்க்கையில் 10 சதவீதம் தான் நமக்கு நடப்பவை, மீதி 90 சதவீதம் நாம் அதில் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதேயாகும” துன்ப காலங்களில் சிதறடிக்கப்பட்ட மக்களுக்கு, அவர்களுடைய துன்பங்களை அவர்கள் எப்படிப் பார்க்க வேண்டுமென யாக்கோபு எழுதுகிறார்,

“நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும் போது… அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” (யாக். 1:2-3).

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில், கடினமான சூழல்களில் தேவனை நம்பும்படி கற்றுக் கொள்கிறோம். நாம் நம்முடைய போராட்டங்களை, தேவன் நாம் விசுவாசத்தில் வளர்வதற்கான சந்தர்ப்பங்களாக்குகின்றார் என பார்க்கக் கற்றுக் கொள்ளும்போது, யாக்கோபு கூறிய மகிழ்ச்சி நிரம்பிய கண்ணோட்டத்தைப் பெற்றுக் கொள்வோம்.

வாக்களிக்கும் வாக்குத்தத்தங்கள்

என்னுடைய இளைய மகளும் நானும் சேர்ந்து ஆடும் ஒரு விளையாட்டை ‘பின்சர்ஸ்’ என்று அழைப்போம். அவள் மாடிப்படிகளில் மேலே செல்லும்போது, நான்  அவளைத் துரத்திப் பிடித்து ஒரு சிறிய ‘கிள்ளு’ கொடுப்பேன். விதி என்னவெனின், நான் அவளை படிக்கட்டிலேறும் போது மட்டும் தான் கிள்ள வேண்டும். (அதுவும் மெதுவாக) அவள் படியேறி மேலே சென்றுவிட்டால் அவள் பாதுகாப்பாகி விடுவாள். சில வேளைகளில் அவளுக்கு விளையாடக் கூடிய எண்ணம் இல்லாதிருக்கும் போது, நான் அவளைத் தொடர்ந்து படியேறிவிட்டால், அவள் உறுதியாகச் சொல்லிவிடுவாள், “கிள்ளு கிடையாது” என்று நானும் சம்மதித்து, “கிள்ளு கிடையாது, நான் வாக்களிக்கிறேன்” என்பேன்.

இன்றைய காலங்களில் இந்த வாக்குகொடுத்தல் ஒரு சிறிய காரியமாகிவிட்டது. நான் என்ன சொல்லுகிறேனோ அதைச் செய்யும் போது, என் மகள் என்னுடைய குணத்தைக் குறித்துச் சற்று புரிந்து கொள்கின்றாள். என்னுடைய நிலையான குணத்தை அறிந்து கொள்கின்றாள். என் வார்த்தைகள் நலமானவை, எனவே என்னை நம்பலாம் என்று அவள் தெரிந்து கொள்கின்றாள். நாம் வாக்களித்ததை செயல்படுத்துவது என்பது ஒரு சிறிய காரியம்தான். ஆனால், வாக்குகளும் அவற்றைச் செயல்படுத்துவதும்தான் உறவுகளை வளர்க்கின்றன என நான் சொல்லுவேன். அவைதான் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் அடித்தளம்.

இப்படியே பேதுருவும் கருதுகின்றார். எனவே தான் அவர், தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நம்மை “அவருடைய திவ்விய சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாகும்படி (2 பேதுரு 1;4) பெலப்படுத்துகிறது என எழுதுகிறார். தேவனை, அவருடைய வார்த்தையால் ஏற்றுக்கொண்டு, அவரைக் குறித்தும், நம்மைக் குறித்தும் கூறப்பட்டுள்ள அவருடைய வார்த்தைகளை நாம் நம்பும் போது, அவருடைய இருதயம் நமக்கு நேராகத் திருப்பப்படுவதைக் காண்கிறோம். நாம் அவருடைய உண்மையான வார்த்தைகளைச் சார்ந்து இருக்கும்போது அவர் உண்மையுள்ளவர் என்பதை நமக்கு வெளிப்படுத்த அவருக்கு ஒரு வாய்ப்பளிக்கிறோம். வேதாகமம் அவருடைய வாக்குத்தத்தங்களால் நிறைந்துள்ளதால் நன்றியோடிருப்போம். நினைப்போம், “அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்” (புல. 3:22-23).

என்னுடைய உதவி

பல வருடங்களாக புகழ்பெற்று நிற்கும் “புரூக்ளின் டேபர்னக்கிள்” பாடகர் குழுவின், ஆன்மாவைப் புதுப்பிக்கும் சுவிசேஷப்பாடல்கள் மூலம் ஏராளமானோர் ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளனர். அவைகளில் ஒன்று சங்கீதம் 121லிருந்து உருவாக்கிய ‘என்னுடைய உதவி’ என்று தலைப்பிடப்பட்டு பாடப்பட்ட பாடல்.

சங்கீதம் 121ன் துவக்கம், சகலத்தையும் படைத்த தேவனாகிய கர்த்தர் மீது வைத்துள்ள தனிப்பட்ட நம்பிக்கையை அறிக்கை செய்தலில் ஆரம்பிக்கிறது, அவரே சங்கீதக்காரனின் உதவியின் ஆதாரமாக இருக்கின்றார் (வச. 1-2). அது எதனைக் காட்டுகிறது? ஸ்திரத்தன்மை (வச. 3), 24 மணி நேர பாதுகாப்பு (வச. 3-4), தொடர்ந்து வரும் அவருடைய பிரசன்னமும், பாதுகாப்பும் (வச. 5-6) எல்லாவிதமான தீமையிலிருந்தும் விலக்கி எப்பொழுதும் முடிவுவரை அதாவது நித்தியம் வரை (வச. 7-8) காப்பதையும் காட்டுகிறது.

தேவனுடைய ஜனங்கள் தேவனே தங்கள் உதவிக்கான ஆதாரம் என்பதை ஆண்டாண்டுகளாகக் கண்டுகொண்டனர் என்பதை வேதாகமத்திலுள்ள பாடல்கள் மூலம் தெரிந்துகொள்கிறோம். என்னுடைய ஆராதனை அனுபவத்தில் நான் என்னுடைய குரலை உயர்த்தி, சார்ல்ஸ் வெஸ்லியின் பாடல்களை, உள்ளத்தின் ஆழத்திலிருந்து பாடும் குழுவினரோடு இணைந்து பாடுவதாகும். அப்பாடல், “அப்பா நான் என் கரங்களை உம்மிடம் உயர்த்துகிறேன், வேறு உதவியை நான் அறியேன்; நீர் என்னைக் கைவிடுவீராயின் நான் எங்கே போவேன்?” மிகப் பெரிய சீர்த்திருத்தவாதி மார்டின் லுத்தர் இதனையே இவ்வாறு எழுதுகின்றார், “என் தேவன் என் உறுதியான கோட்டை, ஒருக்காலும் விலகாத அரண் வெள்ளம் பொன்ற துன்பம் வரும் போது அவரே என் உதவி.”

நீ ஒருவேளை தனிமையில் கைவிடப்பட்டவனாக, குழம்பிய சூழலில் இருக்கின்றாயா? சங்கீதம் 121ன் வார்த்தைகளை நினைத்துப்பார். இந்த வார்த்தைகள் உன் ஆத்துமாவை நம்பிக்கையாலும் தைரியத்தாலும் நிரம்பும்படி செய். நீ தனிமையாக இல்லை. எனவே உன் வாழ்வை உன் சொந்த வழியில் நடத்த முயற்சிக்காதே. மாறாக பூமியில் உனக்குள்ள முடிவில்லாத பாதுகாப்பை இயேசு கிறிஸ்துவின் வாழ்வு, சாவு, உயிர்த்தெழுதல் விண்ணேற்பு மூலம் வெளிப்படுத்திய தேவனில் களிகூரு. எடுக்க வேண்டிய அடுத்த அடியை அவருடைய உதவியால் எடுத்துவை.

ஆவியானவரின் வல்லமையினால்

உன் வழியில் ஒரு மலை குறுக்கிட்டால் நீ என்ன செய்வாய்? தஷ்ரத் மான்ஜியின் கதை அனைவருக்கும் உற்சாகத்தைத் தருவதாய் இருக்கிறது. அவனுடைய மனைவியை அவசர மருத்துவ சிகிச்சைக்காக, மருத்துவமனைக்கு அவனால் கொண்டு செல்ல முடியாததால், அவள் மரித்தாள். ஆனால், மான்ஜி முடியாது என்று கருதிய ஒன்றைச் செய்து முடித்தான். அந்த கிராமத்திலுள்ளவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு, மருத்துவ சிகிச்சை பெற செல்ல வசதியாக, 22 ஆண்டுகளாக மலையின் ஊடே ஒரு பாதையைச் செதுக்கினான். அவன் மரிப்பதற்கு முன்னர், இந்திய அரசாங்கம் அவனுடைய சாதனையைப் பாராட்டியது.

எருசலேம் தேவாலயத்தை மீண்டும் கட்டுவது என்பது, சிறையிருப்பிலிருந்து திரும்பிய இஸ்ரவேலரின் தலைவர்களில் ஒருவனாகிய செருபாபேலின் பார்வையில் முடியாததாகத் தோன்றியது. ஜனங்கள் ஊக்கமிழந்திருந்தனர், அவர்கள் எதிரிகளிடமிருந்து எதிர்ப்பை சந்தித்தனர், அவர்களுக்கு போதிய வளங்கள் இல்லை, ஒரு பெரிய இராணுவப் படை பலமுமில்லை. ஆனால், தேவன் சகரியாவை செருபாபேலிடம் அனுப்பி, அவனுடைய பணியில் ஆவியானவர் செயல்பட்டு. ஒரு சேனையின் பெலத்தையும்விட, தனி மனிதர்களின் பெலத்தையும்விட அல்லது மனித வளங்களையும் விட மேலான வல்லமையையும் விளங்கச் செய்வார் (சகரி. 4:6) என நினைப்பூட்டுகின்றார். இந்த தெய்வீக உதவியின் உத்தரவாதத்தின் மேல் நம்பிக்கையுள்ளவனாய் செருபாபேல் தேவாலயத்தை கட்டும் பணியிலும் அவனுடைய ஜனத்தை மீட்பதிலும், எத்தனை மலைபோன்ற துன்பம் வந்தாலும் தேவன் அவற்றை சமபூமியாக்குவார் என்று தேவன் பேரில் நம்பிக்கை வைத்தான் (வச. 7).

நமக்கு முன்பாக மலைபோன்ற தடைகள் வந்தால் என்ன செய்வோம்? நமக்கு இரண்டு வாய்ப்புகள் உண்டு, ஒன்று நம்முடைய சொந்த பெலத்தைக் சார்ந்திருப்பது மற்றொன்று தேவ ஆவியானவரை நம்புதல். நாம் தேவ ஆவியானவரின் வல்லமையின் மீது நம்பிக்கை வைப்போமாகில் அவர் ஒருவேளை மலைகளை நொறுக்கி சம பூமியாக்குவார், அல்லது நமக்கு பெலனையும் சகிப்புத் தன்மையையும் கொடுத்து மலைமீது ஏறி கடக்கச் செய்வார்.